நீதிபதிகள் உள்ளிட்ட 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம்
கொழும்பு மேலதிக நீதிவான் பி.எஸ். பத்திரன, பலபிட்டிய நீதிவானாகவும், ஆர்.டி. ஜனக, கொழும்பு மேலதிக நீதவானாகவும் மாற்றப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நீதிவான்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிவான்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 106 நீதித்துறை அதிகாரிகளுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீதிச் சேவை ஆணைக்குழுவால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நீதிவான்கள், மேலதிக நீதிவான்கள், மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களுக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரியவந்துள்ளது.
மேற்படி பணி இடமாற்றத்துக்கமைய, மாளிகாகந்த நீதிவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, மஹர நீதிதவான் நீதிமன்றத்திற்கும், மஹர நீதிவான் எச்.ஜி.ஜே.ஆர். பெரேரா, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். காலி நீதிவான் ஐ.என்.என். குமார கமகே, கோட்டை நீதிவானாகவும், குருநாகல் நீதிவான் என்.டி. குணரத்ன, கம்பஹா மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதிவான் பி.எஸ். பத்திரன, பலபிட்டிய நீதிவானாகவும், ஆர்.டி. ஜனக, கொழும்பு மேலதிக நீதவானாகவும் மாற்றப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நீதித்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 17 நீதிவான்கள், மேலதிக நீதிவான்கள் மேலதிக மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.





