Breaking News
செம்மணி மனித புதைகுழி: இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு தொடக்கம்
3ஆவது நாளான 25-08-2025 மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் ஆரம்பமானது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில் , பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் 33ஆவது நாளான 25-08-2025 மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் ஆரம்பமானது.
ஏற்கனவே இருந்த அகழ்வு தளங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 26-08-2025 இன்று முதல் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.





