புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தலை பிற்போடவில்லை: அமைச்சர் லால்காந்த
எதிர்க்கட்சிகளின் போலியான குற்றச்சாட்டுக்களினால் தவறான நிலைப்பாடு தீவிரமடைந்தது.
போலியான விடயங்களை குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவதாலும், சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவதாலும் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தல் பிற்போடப்படவில்லை. நடைமுறையில் தோற்றம் பெற்ற சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவே ஆறாம் தரத்துக்கான புதிய பாடத்தொகுதி 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டுள்ளதென விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் தற்போதைய பிரதான பேசுபொருளாக கல்வி சீர்த்திருத்தம் காணப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் போலியான குற்றச்சாட்டுக்களினால் தவறான நிலைப்பாடு தீவிரமடைந்தது.
எதிர்க்கட்சித் தலைவரும் இனவாதிகளின் நிலைக்கு தள்ளப்பட்டமை அதிருப்திக்குரியது. புதிய கல்வி திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதாலும், சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டதாலும் கல்விக் கொள்கையை பிற்போடவில்லை.
ஆறாம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் மாத்திரமே 2027 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை தொடர்பில் விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுவோம் என்றார்.





