வடகடலில் இந்திய மீன்பிடிப்படகு மீட்பு; 14 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல் மற்றும் உள்ளுர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடற்படையினரால் கடலோர காவல்படையுடன் இணைந்து 10-11-2025 அன்று அனலைதீவுக்கு அருகே இலங்கை கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ரோந்தின் போது, உள்ளுர் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீன்பிடிப் படகொன்றுடன் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல் மற்றும் உள்ளுர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன்மூலம் நாட்டின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் உள்ளுர் மீனவ சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கும் கூட்டு, வலுவான அணுகுமுறை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு வலியுறுத்தப்படுகிறது.
அதற்கமைய யாழ்ப்பாணம் அனலைத்தீவுக்கு அருகில் உள்ள உள்ளுர் கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல இந்திய மீன்பிடி படகுகளை வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அந்த கடற்படை கட்டளை மற்றும் கடலோர காவல்படை துறையுடன் இணைக்கப்பட்ட கப்பல்களைப் பயன்படுத்தி, இலங்கை கடல் எல்லையிலிருந்து அந்த மீன்பிடி படகுகளை அகற்ற வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அங்கு, கடற்படை உள்ளுர் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த ஒரு இந்திய மீன்பிடிக் கப்பலை சட்டப்பூர்வமாக பரிசோதித்தது. இதன் போது சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





