Breaking News
காங்கிரஸிலிருந்து நவ்ஜோத் கௌர் சித்து விலகல்
சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் அவர் தனது பதவி விலகலை அறிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் நவ்ஜோத் கௌர் சித்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி ஆவார். இந்த முடிவு மாநில அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் அவர் தனது பதவி விலகலை அறிவித்தார். பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங்கை கடுமையாக விமர்சித்த அவர், தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகக் கட்சியைத் தவறாக நிர்வகித்து, அதன் அமைப்பு வலிமையை ப் பலவீனப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.





