ஊழலை எதிர்த்துப் போராடுதல் குறித்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம்
இலங்கை வெளிநாட்டு சேவையின் அதிகாரிகளுக்கு மேலதிகமாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் தொடர்புடைய உள்ளக விவகாரப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அதிகாரிகளும் இவ்விழிப்புணர்வூட்டல் நிகழ்வில் பங்கேற்றனர்.
 
        
ஊழலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் நேர்மையான நடத்தையின் பொருத்தப்பாடு தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
'ஊழலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் நேர்மை மற்றும் நெறிமுறைசார் நடத்தையின் பொருத்தப்பாடு' தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான நிகழ்வொன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவால் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் வளாகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தின் அறிவுறுத்தலின்பேரில், அமைச்சின் உள்ளக விவகாரப் பிரிவு மற்றும் இலங்கை வெளிநாட்டுச் சேவை சங்கம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இலங்கை வெளிநாட்டு சேவையின் அதிகாரிகளுக்கு மேலதிகமாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் தொடர்புடைய உள்ளக விவகாரப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அதிகாரிகளும் இவ்விழிப்புணர்வூட்டல் நிகழ்வில் பங்கேற்றனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான தற்போதைய சட்டக் கட்டமைப்பு, அரசு ஊழியர்கள் தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ் பொதுமக்களுக்கு உச்சபட்ச சேவையை வழங்கவேண்டிய வழிமுறைகள் மற்றும் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதில் அரச ஊழியர்களின் பொறுப்பு குறித்த அறிவூட்டலை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.





 
  
