Breaking News
மலேசியா, தாய்லாந்தில் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி
வடக்கு மலேசியாவில் 122,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மலேசியா மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மலேசியாவில் 122,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தெற்கு தாய்லாந்தில் சுமார் 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கனமழை மற்றும் புயல் எச்சரிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சிக்கி தவிக்கும் குடியிருப்பாளர்களை மீட்க அவசர சேவைகள் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்குமிடங்கள் வழங்கப்படுகின்றன.





