இந்தியாவின் ஏதர் எனர்ஜி அடுத்த காலாண்டில் சிறிலங்கா சந்தையில் நுழைகிறது
எவல்யூஷன் ஆட்டோ (Evolution Auto) நிறுவனத்தின் தேசிய விநியோகத்தராக செயற்படுவதுடன், சிறிலங்காவில் ஏதர் எனர்ஜியின் விற்பனை மற்றும் சேவை செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்யும்.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட மின்சார வாகன உற்பத்தியாளரான ஏதர் எனர்ஜி, யூனிகார்ன் மதிப்பீட்டில் என்ஐஐஎப் (NIIF) இலிருந்து நிதியைப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, வரும் காலாண்டில் சிறிலங்காவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நேபாளத்தில் நுழைந்த பின்னர் நிறுவனத்தின் இரண்டாவது பன்னாட்டு வெளியீடு இதுவாகும்.
சென்செக்ஸ் கெப்பிட்டல் பார்ட்னர்ஸ், ஆத்மன் குழுமம் மற்றும் சிறிலங்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சினோ லங்கா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான எவல்யூஷன் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் உடன் கூட்டாண்மை மூலம் ஏதர் ஒரு அனுபவ மையத்தை அமைக்கும் என்று நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
எவல்யூஷன் ஆட்டோ (Evolution Auto) நிறுவனத்தின் தேசிய விநியோகத்தராக செயற்படுவதுடன், சிறிலங்காவில் ஏதர் எனர்ஜியின் விற்பனை மற்றும் சேவை செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்யும்.
கூடுதலாக, மின்சார வாகனத் தத்தெடுப்பை எளிதாக்குவதற்காக நாடு முழுவதும் வேகமாக மின்னேற்றம் செய்யும் உள்கட்டமைப்பின் வலையமைப்பை நிறுவுவதிலும் ஏதர் கவனம் செலுத்தும்.





