Breaking News
பாரிஸ் ஆர்க் டி டிரையம்ப் விழாவில் கத்தி ஏந்திய தீவிரவாதி சுட்டுக் கொலை
கத்திமற்றும் கத்தரிக்கோலை ஏந்திய தீவிரவாதி ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரிஸ் நகரின் ஆர்க் டி டிரையம்ஃப் நினைவுச்சின்னத்தில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவின் போது ஒரு அதிகாரியைத் தாக்க முயன்ற கத்திமற்றும் கத்தரிக்கோலை ஏந்திய தீவிரவாதி ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
1978 ஆம் ஆண்டில் பிறந்த பிரெஞ்சு நாட்டவரான சந்தேக குற்றவாளி, பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் பெல்ஜியத்தில் தண்டிக்கப்பட்டவர் ஆவார். அவர் காயங்களால் மருத்துவமனையில் இறந்தார் என்று பிரெஞ்சு பயங்கரவாத தடுப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்தேகக் தீவிரவாதியின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை.





