Breaking News
கோர்டி ஹோவ் பன்னாட்டுப் பாலம் ஜூலை 27 அன்று திறக்கப்படும்: ஒட்டாவா
கனடா மற்றும் மிச்சிகன் வெள்ளிக்கிழமை அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் பாலத்தைத் திறக்க ஒப்புக்கொண்டன.
ஒன்ராறியோவை மிச்சிகனுடன் இணைக்கும் கோர்டி ஹோவ் பன்னாட்டுப் பாலம் ஜூலை 27 அன்று திறக்கப்படும் என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
கனடா மற்றும் மிச்சிகன் வெள்ளிக்கிழமை அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் பாலத்தைத் திறக்க ஒப்புக்கொண்டன. வீட்டுவசதி, உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்கள் துறை இரவு 7 மணிக்குப் பிறகு வெளியிட்ட செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தத் திறப்பை ஆதரிப்பதற்கும், எல்லையின் இருபுறமும் நன்மைகள் உணரப்படுவதை உறுதி செய்வதற்கும், கனடா மற்றும் அமெரிக்காவும் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையில் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான கூட்டுறவு நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





