பேராசிரியர் ரவீந்திரநாதன், எக்னெலியகொட, பார்தீபன் உடல்களை தேடி தலுவில் மயானத்தில் அகழ்வு; இனியபாரதியின் சகா தகவல்
இனியபாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஜுட் என்று அழைக்கப்படும் ரமேஷ்கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 18வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் 31-07-2025 அன்று சி.ஐ.டியினரால் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இனியபாரதி என்று அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28ஆம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சி.ஜ.டி.யினர் கைதுசெய்தனர்.
இவர்களுடன் இனியபாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஜுட் என்று அழைக்கப்படும் ரமேஷ்கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 18வயதுடைய மாணவன் பார்தீபன், 2006 டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010 ஜனவரி 26ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெர-pயவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சி.ஜ.டிஃயினர் கைது செய்யப்பட்டவர்களை குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அi-ழத்துச்சென்று சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தினர்.
அதற்கமைய குறித்த அடையாளம் காண்பிக்கப்பட்ட பகுதிகளை சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் சி.ஜ.டி.யினர் அனுமதி கோரியதையடுத்து நீதிவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்;கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஜுட் என்று அi-ழக்கப்படும் ரமேஷ்கண்ணா அடையாளம் காண்பித்த இடத்தினை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.