பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஹித் பதவி விலகல்
எம்.எஸ். அப்துல் வாஹித் பதவி விலகல் கடிதத்திற்கமைய, குறித்த பதவி விலகல் 2026 செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததாகச் சமர்ப்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
எம்.எஸ். அப்துல் வாஹித் பதவி விலகல் கடிதத்திற்கமைய, குறித்த பதவி விலகல் 2026 செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய,பத்தாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.





