மத்தளை பன்னாட்டு விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பி விடுவது குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்
பயணிகளுக்கு பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்திற்கு விமானம் புறப்படும் வரை மத்தளைமற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹோட்டல் தங்குமிடம் வழங்கப்பட்டது.

மே 04 ஆம் திகதி மத்தள பன்னாட்டு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த மெல்பேர்ணிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த யுஎல் 605 என்ற விமானம் கட்டுநாயக்கவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்தளைக்கு திருப்பி விடப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
பொது விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி விமானத்தின் இயக்கக் குழுவினர் தங்களது விமானக் கடமை நேரத்தை அடைந்துவிட்டதால், விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கமளித்தது.
யுஎல் 605 விமானத்தில் 294 பயணிகள், 3 கைக்குழந்தைகள் மற்றும் 15 பணியாளர்கள் இருந்தனர். சிறிலங்காவில் இறங்க வேண்டிய பயணிகளுக்கு கொழும்புக்கு தரைவழி போக்குவரத்து வழங்கப்பட்டது. இலங்கைக்கு அப்பால் பயணிக்கும் பயணிகளுக்கு பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்திற்கு விமானம் புறப்படும் வரை மத்தளைமற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹோட்டல் தங்குமிடம் வழங்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை திசை திருப்பியதன் விளைவாக பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது, இது விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை என்று கூறியது.
"பாதிக்கப்பட்ட பயணிகளை அவர்களின் இறுதி இலக்குடன் இணைக்க விமான நிறுவனம் தற்போது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது."