மருத்துவ பீட மாணவன் படைத்த சாதனை
.

நேற்று (26) முன்தினம் நடைபெற்ற ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 23 ஆவது பட்டமளிப்பு விழாவில் மருத்துவ மாணவர் ஒருவர் 10 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவன் 19 தங்கப் பதக்கங்களில் 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கு முன்னர் மாணவியொருவர் 09 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதுடன், ரஜரட்ட மருத்துவ பீட வரலாற்றில் அதிகூடிய தங்கப் பதக்கங்களைப் பெற்ற சாதனை இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தரிந்து தேஷான் மாபா என்ற இந்த மாணவனின் பெற்றோரும் வைத்தியர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் ஜானக புஷ்பகுமாரதெரிவிக்கையில், இந்த மாணவனின் திறமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
இவ்வாறான திறமையான மாணவர் இலங்கையில் இருப்பாரா என்பது தமக்கு சந்தேகம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்த மாணவன் ரஜரட்ட மருத்துவ பீடத்தில் விரிவுரையாளராக இணைந்தால், தானும் ரஜரட்ட மருத்துவ பீடத்தின் முழு பீடமும் அதற்கு தயாராக இருப்பதாக பீடாதிபதி தெரிவித்தார்.