யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்
கனேடிய உயர்ஸ்தானிகர் 27-01-2026 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இரு நாட்களாக வடக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் 27-01-2026 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறி சற்குணராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழி பெயர்ப்பு கற்கைகள் துறைகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் உட்பட சமகால விடயங்கள் பற்றியும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கனேடிய தூதரக அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.





