ஜனாதிபதியாக பதவி வகிக்காத போது, கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தொடர முடியும் என்று லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கவிற்கு அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என தெரிவித்த தீர்ப்புக்கெதிராக அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அஹிம்சா விக்ரமதுங்க இதுவொரு வெற்றியென்றும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கான செய்தியென்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றமை பொறுப்புக்கூறலை தாமதப்படுத்துமே அன்றி தடுக்க முடியாது எனவும் அவரால் பாதிக்கப்பட்ட எம் போன்றவர்கள் நீதிக்காக போராடுவதை ஒருபோதும் கைவிடப் போவதில்லையென அஹிம்சா விக்ரமதுங்க மேலும் தெரிவித்தார்.