ஆதிவாசி மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - பிரதமர் ஹரிணி
அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஹென்னானிகல கிராம மக்களுக்கு இதுவரை நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதை ஆதிவாசித் தலைவர் எடுத்துரைத்தார்.
ஆதிவாசி மக்கள் தமது பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஆதிவாசித் தலைவருக்கு உறுதியளித்தார்.
ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோவுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு 12-06-2026 அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது, ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தங்களின் பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆதிவாசித் தலைவர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.
ஆதிவாசி மக்கள் எவ்விதத் தடங்கலுமின்றி தமது பாரம்பரிய காணிகளை அனுபவிப்பதற்கு உரிமை உண்டு என்றும், அதற்காகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் பிரதமர் இதன்போது விளக்கமளித்தார்.
அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஹென்னானிகல கிராம மக்களுக்கு இதுவரை நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதை ஆதிவாசித் தலைவர் எடுத்துரைத்தார். இதன்போது, பிரதமர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையாக நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்தார்.
தம்பானை பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அது குறித்து ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் தெரிவித்தார்.





