தனிப்பட்ட பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வழங்குங்கள்: 20 எம்.பிக்கள் கடிதம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரி சபாநாயகர் ஜகத் விக்கிரத்னவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைய அச்சுறுத்தல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒன்றின் பின்னரே, தகுதியானவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





