இரத்தினக்கல் வர்த்தகரின் மர்மமான மரணம் குறித்து விசாரணை
இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்த, இரத்தினபுரி, பாம் கார்டன், தென்னவத்த முகவரியில் வசித்து வந்த, கம்பேவெல மொஹொட்டாலாலாகே நிஹால் சிசிர குமார என்பவர் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்த இரத்தினக்கல் வர்த்தகரின் மர்மமான மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாட்சியாளர்களின் பெயர் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு முறைப்பாட்டாளருக்கு அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இரத்தினக்கல் அகழ்வில் மூலம் கிடைத்த வருமானம் எனக் குறிப்பிட்டு 450 இலட்சம் ரூபா பணத்தை மறைத்து தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்த, இரத்தினபுரி, பாம் கார்டன், தென்னவத்த முகவரியில் வசித்து வந்த, கம்பேவெல மொஹொட்டாலாலாகே நிஹால் சிசிர குமார என்பவர் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பிரதிவாதியான சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான 450 இலட்சம் ரூபா பணம், தற்கொலை செய்துகொண்ட நபரின் பெயரிலுள்ள தனியார் வங்கியொன்றின் மூன்று நிலையான வைப்புக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்தமை தொடர்ந்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.





