Breaking News
தேசிய மரபுகளுக்கு ஏற்ப பிரதமர் புத்தாண்டு கொண்டாடினார்
தேசிய புத்தாண்டு பாரம்பரியங்கள் மற்றும் சிறிலங்காவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் மற்றும் மதிக்கும் நடனங்கள் இடம்பெற்றன.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் தேசிய வைபவம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் கடுவெல பஹல போமிரியவில் நடைபெற்றது.
புத்தாண்டு அனுஷ்டிப்புகளை அதிகாலை 06.44 மணிக்கு ஆரம்பித்த பிரதமர், செழிப்பு மற்றும் புத்தாண்டுக்கான பணிகளை ஆரம்பித்ததைக் குறிக்கும் வகையில் ஒரு மாமரக்கன்றை வைபவ ரீதியாக நாட்டினார் என்று பிரதமர் ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பழக்கவழக்கங்கள், பிரபலமான நாட்டுப்புற விளையாட்டுகள், பாடல்கள் மற்றும் நடனங்கள், தேசிய புத்தாண்டு பாரம்பரியங்கள் மற்றும் சிறிலங்காவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் மற்றும் மதிக்கும் நடனங்கள் இடம்பெற்றன.





