Breaking News
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு பிணை
ஐ.நா மனித உரிமைகள் பணிக்குழு திங்களன்று அவரது தன்னிச்சையான சிறைவாசம் பன்னாட்டுச் சட்டத்தை மீறியது என்று கூறியது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றம், ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு செவ்வாய்க்கிழமை இடைக்காலப் பிணை வழங்கியதாக ஊடகமான ஏஆர்ஒய் நியூஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ள கான், பிப்ரவரி பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சில வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பணிக்குழு திங்களன்று அவரது தன்னிச்சையான சிறைவாசம் பன்னாட்டுச் சட்டத்தை மீறியது என்று கூறியது.
"சிறப்புப் பொறுப்புக்கூறல் நீதிமன்றம் பிணை வழங்கியது", இடைக்காலப் பிணை பற்றி ஏஆர்ஒய் நியூஸ் செய்தி ஊடகம் எக்ஸ் தளத்தில் ஒரு செய்தியில் கூறியது.





