டாக்காவில் இந்துக்கள் போராட்டம்; சிலை கட்டுமானப் பணிகள் நிறுத்தம்
சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான இந்துக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பங்களாதேஷின் டாக்காவில் 81 அடி உயர இந்து சிலை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தீவிர இஸ்லாமியவாதிகள் ராமரின் உருவப்படத்தை அவமதித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இதையடுத்து பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து சிலை கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான இந்துக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்து தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் வளாகத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படவிருந்த இந்தச் சிலை, முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட பங்களாதேஷில் வாழும் இந்து சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மத நல்லிணக்கத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்புகள் இருந்தபோதிலும், அண்மைக் காலங்களில் மத அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை, நாட்டின் சுமார் 8 சதவீத மக்கள் தொகையை உள்ளடக்கும் இந்து சமூகத்தின் அச்சங்களை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.





