சீரற்ற காலநிலையால் 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - நீரில் மூழ்கிய புத்தளம் நகரம்
இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 1113 குடும்பங்களைச் சேர்ந்த 3475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டமே வெள்ளம் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 1113 குடும்பங்களைச் சேர்ந்த 3475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 40 குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 489 குடும்பங்களைச் சேர்ந்த 1310 பேர் 8 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1264 நபர்கள் 6 பாதுகாப்பு முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





