குருந்தூர் மலை தொல்பொருள் மோசடி குறித்து சாணக்கியன் எம்.பி சாட்சியம்
விஹாராதிபதி குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு 21.07.2025 இல் சமர்ப்பித்த முறைப்பாட்டின் பிரதியொனறையும் எனக்கு வழங்கினார்.
குருந்தூர் மலைப் பிரதேசத்தில், பெளத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களில் வீசி அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி தொல்பொருள் திணைக்களம் கையப்படுத்தியத்தை மிகிந்தலை விகாராதிபதி தன்னிடம் தெரியப்படுத்தியதாக இலங்கை தமிழரசுககட்சியின் மட்டக்கப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லும் வழியில் மிஹிந்தலை பிரதேசத்தில் இருக்கும் பௌத்த விஹாராதிபதியின் விசேட அழைப்பின் பெயரில் அவரைச்சந்தித்தேன். அதற்கான காரணம், குருந்தூர் மலையில் நடைபெற்ற விடயங்கள் குறித்து அவர் என்னிடம் பல விடயங்கள் குறித்து கருத்து பகிர்ந்தார்.
குருந்தூர் மலையில் விகாரை கட்டப்பட்டது. அண்மித்த காணிகள் மற்றும் நிலங்கள் தனிநபர்களினால் கையகப்படுத்தப்பட்டது. எமது கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ,சுமந்திரன் இதற்கான வழக்கினை வாதாடி இருந்தார்.
விஹாராதிபதி குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு 21.07.2025 இல் சமர்ப்பித்த முறைப்பாட்டின் பிரதியொனறையும் எனக்கு வழங்கினார். அதில் அவர் பெயர் குறிப்பிட்டு தொல்பொருள் திணைக்களத்தில் பிரதி அத்தியட்சகராக செயற்பட்ட ஜயதிலக்க என்னும் நபர் பெளத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களில் வீசி அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி தொல் பொருள் திணைக்களம் கையப்படுத்தியதை தெரியப்படுத்தியிருந்தார். பெளத்த துறவியான இவர் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்க விடயம் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் அவருடனான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலை தொடர்ந்து, இந் நாட்டில் அனைத்து மக்களும் மும்மொழிகளான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை படிப்பிப்பதற்கான ஓர் சட்டமூலம் கொண்டுவந்து அனைவரையும் படிப்பிக்க வேண்டும் என்ற ஓர் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்திருந்தார்.





