தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் - மனோ கணேசன், திகாம்பரம் வலியுறுத்து
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைச்சின் அமைச்சக ஆலோசனை கூட்டம் 07-01-2026 அன்று நடைபெற்றது.
தோட்ட தொழிலாளருக்கான இந்த மாத சம்பள உயர்வு 400 ரூபா அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளது. இதையிட்டு மகிழ்ச்சி யடைவதோடு. மூன்று அரசாங்க பெருந்தோட்ட நிறுவனங்கள், இருபத்தி இரண்டு தனியார் தோட்ட நிறுவனங்கள், சிறு தோட்ட உடைமையாளர் தோட்டங்கள், தனியார் சிறு தோட்டங்கள், ஆகிய நான்கு பிரிவு தோட்டங்களில் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த வழங்கப்பட வேண்டும் என்பதை அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைச்சின் அமைச்சக ஆலோசனை கூட்டம் 07-01-2026 அன்று நடைபெற்றது. இதில் தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, மனோ கணேசன் எம்.பி, திகாம்பரம் எம்.பி, கலைசெல்வி எம்.பி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இதன்போது, திகாம்பரம் எம்.பி, ‘அரசாங்கத்தின் 200 ரூபா கிடைக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், கம்பனி தோட்டங்களில் இப்போதே, தொழிலாளர் கொண்டு வர வேண்டிய கொழுந்து நிறை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. வழமையை விட அதிக நிறை கொண்டு வர வேண்டும். இல்லா விட்டால், முழு நாள் சம்பளம் தர மாட்டோம் என்று இப்போதே கம்பனிகள் தொழிலாளரிடம் கூற தொடங்கி விட்டன. இதை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும். இல்லா விட்டால், நீங்கள் சொன்ன சம்பள உயர்வு 400 ரூபா கிடைக்காது என கூறினார்.
இவ்வேளையில் மீண்டும் கருத்து கூறிய மனோ கணேசன் எம்பி, “எல்லா காலத்திலும், எல்லா பிராந்தியங்களிலும் ஒரே மாதிரியான, கொழுந்து கிடைப்பதில்லை. ஆகவே அதை வைத்து கொண்டு நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்து வழங்கி விளையாடாமல், கண்காணிப்பது அரசின் பணியாகும். அதை இந்த தொழில் அமைச்சு, குறிப்பாக அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் கவனத்தில் எடுப்பார்கள் என நான் நம்புகிறேன். கடந்த வரவு ,செலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் போதுஇ அரசுக்கு ஆதரவாக தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிக்கள் வாக்களித்தோம். அதற்கு காரணம், தோட்டத்தொழிலாளர்கள் பாரபட்சமின்றி சம்பள உயர்வைப் பெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். தற்போதும் அதளையே மீள நினைவு படுத்துகின்றோம் என்றார்.





