மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து மூன்று முன்மொழிவுகள் முன்வைப்பு
எந்த காரணத்திற்காக இருந்தாலும், புதிய எல்லை வரையறைகள் தேவைப்படும் வழிமுறைகளைப் பற்றி விவாதிப்பது, மாகாண சபைத் தேர்தல்கள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதற்கு சந்தேகமின்றி வழிவகுக்கும்.
மாகாண சபைத் தேர்தல்களுக்கான முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவிடம் சமூக நீதிக்கான தேசிய இயக்கம், 3 முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.
இதன் மூலம், மாகாண சபைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்தில் கொள்ளவும், தொடர்புடைய முன்மொழிவுகளை மேலும் நடைமுறைக்கு ஏற்ற வகையில் நனவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதமின்றி எவ்வாறு நடத்தலாம் என்பதைச் சுட்டிக்காட்டவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எதிர்பார்க்கிறது.
கலாநிதி சுஜாதா கமகே, பேராசிரியர் சுதாந்தா லியனகே மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியான செல்வி லிஹினி பெர்னாண்டோ ஆகியோரின் பங்களிப்புகளுடன், "பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் வழிமுறை" என்ற தலைப்பில் சமீபத்தில் நடைபெற்ற அறிவார்ந்த கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, சமூக நீதிக்கான தேசிய இயக்கம் இந்தப் பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.
அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் தலைவரான அமைச்சர் விஜித ஹேரத்திடம், சமர்ப்பித்துள்ள முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
முந்தைய முறையை மீண்டும் கொண்டு வருதல்
அதன்படி இந்த நிலையில், தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவதற்கான ஒரே வழி, 2017-க்கு முன்பு இருந்த முன்னுரிமை வாக்குகளுடன் கூடிய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை ஒரு எளிய சட்டத் திருத்தத்தின் மூலம் மீண்டும் கொண்டுவருவதே ஆகும். எந்த காரணத்திற்காக இருந்தாலும், புதிய எல்லை வரையறைகள் தேவைப்படும் வழிமுறைகளைப் பற்றி விவாதிப்பது, மாகாண சபைத் தேர்தல்கள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதற்கு சந்தேகமின்றி வழிவகுக்கும்.
பெண் வேட்பாளர்களுக்கு மூன்றிலொரு பங்கு பிரதிநிதித்துவம்
முன்னுரிமை வாக்குகளுடன் கூடிய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ், மூன்றில் இரண்டு பங்கு அல்லது 33.3% பெண் வேட்பாளர்களை உறுதி செய்வது சாத்தியம் என்றாலும், இறுதி அவையில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது இயலாத காரியம். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, மொத்த வேட்பாளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்க வேண்டும் என்ற நடைமுறை விதியை மட்டும் உடனடியாக சட்டத் திருத்தத்தில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம். இந்த நிலையில் மேலும் சிக்கலான முன்மொழிவுகளை முன்வைப்பதும் மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதப்படுத்தும். மேலும், மாகாண அரசாங்கத்தில் கட்டாய 25 சதவீத பிரதிநிதித்துவத்தின் மூலம் பெண்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, மாகாண சபைகளில் உள்ள ஒதுக்கீட்டை உள்ளாட்சி ஒதுக்கீட்டிற்கு குறைப்பது நியாயமானதாகக் கருதப்படலாம்.
இளைஞர்களுக்கான ஆறிலொரு பங்கு வேட்பாளர் பிரதிநிதித்துவம்
இளைஞர்களுக்கான மொத்த வேட்பாளர் பட்டியலில் ஆறில் ஒரு பங்கு, அதாவது 16.7 சதவீத, இளைஞர்களாக இருக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனையைச் சேர்க்கலாம். ஏற்கனவே உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது என்பனவாகும்.





