தொல்பொருள் பதாகைகளை அகற்றிய மூவரும் பிணையில் விடுதலை
மூவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பெயர் பலகைகளை அகற்றியதாக தெரிவிக்கப்பட்டு பட்டிப்பளை பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், மண்முனை தென் மேற்கு பிரதேச பிரதேச சபை உத்தியோகத்தர் ஆகிய மூவர் 25-11-2025அன்று சந்தேகத்தின் பெயரில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மூவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களின் சார்பில் சட்டத்தரணி விஜயகுமார் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கினை விசாரணைசெய்த நீதிவான் நீதிமன்ற நீதிபதி அண்ணத்துரை தர்ஷினி மூவரையும் தலா இருபத்தைந்தாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதித்தார். இது தொடர்பான வழக்கானது எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





