உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்கேற்க பிரதமர் சுவிட்சர்லாந்து பயணம்
2026 ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டமானது 'உரையாடல் மனப்பாங்கு' (A Spirit of Dialogue) எனும் கருப்பொருளின் கீழ் நடத்தப்படவுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் - குளோஸ்டர்ஸில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று திங்கட்கிழமை காலை நாட்டிலிருந்து புறப்பட்டார். நேற்றைய தினம் ஆரம்பமான இம்மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டமானது 'உரையாடல் மனப்பாங்கு' (A Spirit of Dialogue) எனும் கருப்பொருளின் கீழ் நடத்தப்படவுள்ளது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் என 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய சர்வதேச தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களுடன் தொடர்ச்சியான உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





