குற்றச்செயல்களுடன் தொடர்புடைய26 பேர் உட்பட 615 சந்தேக நபர்கள் கைது
சந்தேகத்தின் பேரில் 615 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 131 சந்தேகநபர்கள் மற்றும் நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 274 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கைக்கு அமைய பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 26 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 615 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியதாக வலய மட்டத்திலான பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, கடந்த 2026 ஜூன் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 28,891 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 26 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேகத்தின் பேரில் 615 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 131 சந்தேகநபர்கள் மற்றும் நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 274 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 60 சாரதிகளும், ஆபத்தான முறையில் அலட்சியமாகவும், கவனயீனத்துடனும் வாகனம் செலுத்திய 158 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட் 5418 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





