கலாசார பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து மனிதாபிமான தலைமுறையை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம்: பிரதமர்
அறிவார்ந்த அறிவால் செறிவூட்டப்பட்ட எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் அடங்கும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (16) பிற்பகல் மாத்தறை உறுபொல வளாகத்தில் அமைந்துள்ள சிறிரத்னஜோதி பிரிவெனா கல்வி நிறுவனத்தின் வஜ்ர ஜெயந்தி நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், மனிதாபிமானம், சுற்றாடல் உணர்வுள்ள, இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மையை மதிக்கின்ற மற்றும் அறிவார்ந்த அறிவால் செறிவூட்டப்பட்ட எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் அடங்கும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய மறுமலர்ச்சி யுகத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு அரசியல், பொருளாதாரம், மதம், கல்வி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பரவியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், கல்வி முறைமையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சரியான தலையீட்டின் மூலம் சரியாக அடையாளம் கண்டு தீர்வு காண்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.





