எரிபொருள் விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் விஜய் கண்டனம்
மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளன.
மேற்கு ஆசியாவில் பதட்டங்களுக்கு மத்தியில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வுடன் போராடுவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெள்ளிக்கிழமை லிட்டருக்கு சுமார் ரூ.3 உயர்த்தப்பட்டது. இது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் முதல் பெரிய எரிபொருள் விலை உயர்வைக் குறிக்கிறது.
இந்த விலை உயர்வை ஏற்கத்தக்கதல்ல என்று தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது."
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது, பெட்ரோல் நிறுவனங்கள் அதற்கேற்ப பெற்றோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மாறாக, அந்த நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே எடுக்கின்றன. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தவறானது என்று அவர் மேலும் கூறினார்.





