Breaking News
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக சமன் ஸ்ரீ ரத்நாயக்க
இதற்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எம்.கே.சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் ஏனைய உறுப்பினர்களாக எம். பி. ரோஹண புஷ்பகுமார மற்றும் கே. தவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தமையால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.





