டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வழக்கு
சர்வதேச அளவில் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நபர்களை நீதியின் முன் நிறுத்தும் முயற்சிகளை அமெரிக்காவின் பொருளாதார தடைகள் பாதிப்பதாக மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் மூன்று வழக்கறிஞர் அமைப்புகள், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த வழக்கு சவால் செய்கிறது.
சர்வதேச அளவில் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நபர்களை நீதியின் முன் நிறுத்தும் முயற்சிகளை அமெரிக்காவின் பொருளாதார தடைகள் பாதிப்பதாக மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஹேக்கை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை குறிவைத்து டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவு, ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர் மற்றும் மூன்று பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட அமெரிக்கத் தடைகள் ஆகியவை சர்வதேச நீதித்துறைக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





